Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ ரோட்டோர கிணறுகளில் தடுப்புச்சுவர் இன்றி அபாயம்

ரோட்டோர கிணறுகளில் தடுப்புச்சுவர் இன்றி அபாயம்

ரோட்டோர கிணறுகளில் தடுப்புச்சுவர் இன்றி அபாயம்

ரோட்டோர கிணறுகளில் தடுப்புச்சுவர் இன்றி அபாயம்

ADDED : அக் 11, 2025 04:46 AM


Google News
Latest Tamil News
தேவாரம்:போடி அருகே திம்மிநாயக்கன்பட்டி தேவாரம் செல்லும் ரோட்டோர கிணறு அருகே தடுப்புச்சுவர் இல்லாததால் விபத்து அபாயம் உள்ளது.

திம்மிநாயக்கன்பட்டியில் இருந்து தேவாரத்திற்கு எரணம்பட்டி, கோணாம்பட்டி, குட்ட செட்டிபட்டி,

மறவபட்டி வழியாக தேவாரம் செல்லாம். திம்மிநாயக்கன்பட்டி, கோணாம்பட்டி வழியாக எரணம்பட்டி செல்லும் ரோட்டோர கிணறுகள் உள்ளன. இந்த கிணறுகளுக்கு தடுப்புச் சுவர் இன்றி திறந்த வெளியாக உள்ளன. இரவில் வாகனங்களில் இந்த ரோட்டில் செல்வோர் கிணறு இருப்பது அறியாமல் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. ரோட்டோர கிணறுகளை சுற்றி தடுப்புச்சுவர் அமைக்கவும், முன்னெச்சரிக்கை செய்ய அரசு உத்தரவிட்டது.ஆனாலும் இதுவரை யாரும் தடுப்பு சுவர் அமைக்கவில்லை. அசம்பாவிதம் ஏற்படும் முன் தடுப்புச் சுவர் அமைத்திட நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us