Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ எஸ்.எஸ்.ஏ., பணியாளர்கள் தீபாவளி முன்பணம் பெற முடியாமல் தவிப்பு

எஸ்.எஸ்.ஏ., பணியாளர்கள் தீபாவளி முன்பணம் பெற முடியாமல் தவிப்பு

எஸ்.எஸ்.ஏ., பணியாளர்கள் தீபாவளி முன்பணம் பெற முடியாமல் தவிப்பு

எஸ்.எஸ்.ஏ., பணியாளர்கள் தீபாவளி முன்பணம் பெற முடியாமல் தவிப்பு

ADDED : செப் 26, 2025 03:02 AM


Google News
தேனி:ஒருங்கிணைந்த பள்ளிகல்வி திட்ட (எஸ்.எஸ்.ஏ.,) பணியாளர்கள் கடந்த தீபாவளியின் போது பண்டிகை முன்பணம் பெறமுடியாமல் பொங்கல் பண்டிகைக்கு பெற்றனர்.

அதனால் இந்த ஆண்டும் அவர்கள் தீபாவளி முன்பணம் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தில் (சமக்ர சிக் ஷா அபியான் ) 3 ஆயிரம் பணியாளர்கள் உள்னர். இவர்களில் பலரும் கடந்தாண்டு தீபாவளியின் போது பண்டிகை முன்பணம் கோரி விண்ணப்பித்தனர்.

நிதி இல்லை என கூறி முன்பணம் வழங்கவில்லை. பின்னர் பொங்கல் பண்டிகையின்போது முன்பணம் ரூ. 10 ஆயிரம் வழங்கப்பட்டது. இதற்காக மாதந்தோறும் பணியாளர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்கின்றனர்.

தற்போது தீபாவளி முன்பணம் ரூ. 20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே வாங்கிய பண்டிகை முன்பணத்தில் நிலுவையில் உள்ள தொகை முழுவதையும் செலுத்தி விட்டு தற்போது தீபாவளி பண்டிகை முன் பணம் பெற இவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், ஒரு பண்டிகை முன்பணம் வாங்கிய பத்து மாதங்களுக்கு பின் விண்ணப்பிக்க வேண்டும் என்ற விதியை சுட்டிக்காட்டி இவர்களுக்கு முன்பணம் மறுக்கப்பட்டுள்ளது.

பொங்கல் முன்பண நிலுவை செலுத்தியவர்களுக்கு தீபாவளி முன்பணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us