Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ சுங்கச்சாவடிக்கு தற்காலிக தடை

சுங்கச்சாவடிக்கு தற்காலிக தடை

சுங்கச்சாவடிக்கு தற்காலிக தடை

சுங்கச்சாவடிக்கு தற்காலிக தடை

ADDED : ஜூன் 20, 2025 03:53 AM


Google News
மூணாறு: தேவிகுளம் அருகே உள்ள சுங்கச் சாவடி செயல்பட தற்காலிகமாக தடை விதித்து சப் கலெக்டர் ஜெயகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் தேவிகுளம் அருகே சுங்கச்சாவடி கடந்தாண்டு அக். 4ல் பயன்பாட்டுக்கு வந்தது.

இந்த சுங்கச்சாவடி இடுக்கி மாவட்டத்தில் முதல் சுங்கச்சாவடி என்ற அந்தஸ்து பெற்றது.

இந்நிலையில் சுங்கச்சாவடியில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் செல்லும் பாதையில் பல்வேறு இடையூறுகள் உள்ளதால், அவை அவசர காலங்களில் கடந்து செல்ல இயலாத நிலை ஏற்பட்டது. அதனால் இடையூறுகளை சரி செய்வதற்கு வசதியாக சுங்கச்சாவடி செயல்பட தற்காலிகமாக தடை விதித்து தேவிகுளம் சப் கலெக்டர் ஜெயகிருஷ்ணன் நேற்று உத்தரவிட்டார்.

ஆரம்பத்தில் சுங்கச்சாவடி செயல்பட அனைத்து கட்சியினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால் பயன்பாட்டிற்கு வருவதில் சற்று காலதாமதம் ஏற்பட்டது குறிப்பிடதக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us