Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ உயர்கல்விக்கு பொருளாதார உதவி கோரி மாணவர்கள் மனு

உயர்கல்விக்கு பொருளாதார உதவி கோரி மாணவர்கள் மனு

உயர்கல்விக்கு பொருளாதார உதவி கோரி மாணவர்கள் மனு

உயர்கல்விக்கு பொருளாதார உதவி கோரி மாணவர்கள் மனு

ADDED : ஜூன் 20, 2025 03:53 AM


Google News
தேனி: கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் உயர்கல்வி வழிகாட்டுதல், சிறப்பு குறைதீர் கூட்டம் நடந்தது. சி.இ.ஓ., இந்திராணி முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிளஸ் 2 முடித்து உயர்கல்வி சேர்வது தொடர்பான பிரச்னைகள் பற்றி மாணவர்கள் பெற்றோர்களுடன் மனு அளித்தனர்.

சிலர் ஆதாரில் பெயர் திருத்தம் செய்து வழங்க வேண்டும், கல்லுாரி படிப்புகள் தொடர்பாக ஆலோசனை வழங்க வேண்டும் என மனு அளித்தனர். பல மாணவர்கள் உயர்கல்வி கட்டணம் தொடர்பாக பொருளாதார உதவி கோரினர்.பெரியகுளம் செல்லா காலனியை சேர்ந்த 3 மாணவிகளுக்கு கல்வி நிதி உதவி வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், வேலைவாய்ப்பு அலுவலர் ராமபிரபா, குழந்தைகள் நல அலுவலர் சந்தியா, சமூக நலத்துறை அலுவலர் ஷியாமளா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உயர்கல்வி தொடர்பான ஆலோசனை தேவைப்படும் மாணவர்கள் 82200 77114, 78717 42115 என்ற அலைபேசி எண்ணில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us