ADDED : செப் 24, 2025 06:41 AM
தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி வத்தலக்குண்டு ரோடு சாத்தாகோவில்பட்டி பிரிவில் ஸ்ரீ திம்மராயப்பெருமாள் கோயில் உள்ளது. இதே பகுதியைச் சேர்ந்த மதுரை வீரன் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இரவில் மர்மநபர்கள் கோயில் கதவை உடைத்து பித்தளை சூடத்தட்டு,கைமணி, அண்டா உட்பட ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 8 வகையான பொருட்களை திருடி சென்றனர்.
கோயில் தலைவர் ராமசாமி புகாரில்,தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.