/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ நெடுஞ்சாலையில் கால்நடைகள் வாகன ஓட்டிகள் பரிதவிப்பு நெடுஞ்சாலையில் கால்நடைகள் வாகன ஓட்டிகள் பரிதவிப்பு
நெடுஞ்சாலையில் கால்நடைகள் வாகன ஓட்டிகள் பரிதவிப்பு
நெடுஞ்சாலையில் கால்நடைகள் வாகன ஓட்டிகள் பரிதவிப்பு
நெடுஞ்சாலையில் கால்நடைகள் வாகன ஓட்டிகள் பரிதவிப்பு
ADDED : ஜூலை 28, 2024 10:58 PM

கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றியம், புதுமாவிலங்கை ஊராட்சிக்கு உட்பட்டது அகரம் கிராமம். இந்த ஊராட்சி பகுதியில் உள்ள திருப்பாச்சூர் - கொண்டஞ்சேரி நெடுஞ்சாலை வழியே, தினமும் 10,000த்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இப்பகுதியில் வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகள் நெடுஞ்சாலையில் இளைப்பாறுகின்றன. இதனால், இவ்வழியே வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்கிவருகின்றனர்.
மாவட்ட கலெக்டர், எஸ்.பி., உத்தரவிட்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெடுஞ்சாலையில் உலா வரும் கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.