/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 1 7 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தர நிர்ணய அங்கீகாரச் சான்று 1 7 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தர நிர்ணய அங்கீகாரச் சான்று
1 7 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தர நிர்ணய அங்கீகாரச் சான்று
1 7 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தர நிர்ணய அங்கீகாரச் சான்று
1 7 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தர நிர்ணய அங்கீகாரச் சான்று
ADDED : ஜூலை 29, 2024 03:17 AM
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் கடந்த, நான்கு ஆண்டுகளில், 17 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு, தேசிய தர நிர்ணய அங்கீகார சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய சுகாதார வள மையம், தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் நாடு முழுதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் அளிக்கப்படும் மருத்துவ சேவை மற்றும் தரம் ஆகியவை குறித்து மதிப்பிடுகிறது. படுக்கை வசதி, மருத்துவ சேவை, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்டவை குறித்து நோயாளிகளிடமே கருத்து கேட்டு, நுாற்றுக்கு எவ்வளவு மதிப்பெண் என கணக்கிடப்படுகிறது.
எழுபது மதிப்பெண்களுக்கு மேல் ஆரம்ப சுகாதார நிலையங்கள், தேசிய தர நிர்ணய அங்கீகார சான்றிதழ் பெற தகுதியுடையவையாக கருதப்படுகிறது. இச்சான்றிதழ் பெறும் மையத்துக்கு மூன்று லட்சம் ரூபாய் நிதி மேம்பாட்டு பணிகளுக்கென வழங்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில், மங்கலம், குள்ளம்பாளையம், உடுமலை, மூலனுார், கொடுவாய், பொன்னாபுரம், பச்சாபாளையம், பூளவாடி, உப்பிலிபாளையம், பெதப்பம்பட்டி, செம்மிபாளையம், செல்லம்பாளையம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களும், பெரியாண்டிபாளையம், தாயம்பாளையம், சூசையாபுரம், கோவில்வழி, சுண்டமேடு ஆகிய மாநகராட்சி சுகாதார மையங்கள் என, மொத்தம், 17 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேசிய தர நிர்ணய அங்கீகார சான்றிதழ் பெற்றுள்ளன.