ADDED : ஜூன் 30, 2024 01:58 AM
திருப்பூர்:திருப்பூர் கண் கண்ணாடி கடை (ஆப்டிகல்ஸ்) உரிமையாளர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
இந்த சங்கத்தின் சிறப்பு கூட்டம் திருப்பூரில், நேற்று நடந்தது. சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சங்க தலைவராக லீலா கிருஷ்ணன், துணை தலைவராக ஹரிபிரசாத், செயலாளராக துரை முருகேசன், இணை செயலாளராக சக்திதீபக், பொருளாளராக யூசுப், இணை பொருளாளராக வெங்கடேஷ் மற்றும் கவுரவ ஆலோசகராக தங்கராஜ் ஆகியோர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு சங்க உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.