Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கூடுதல் பஸ்கள் தேவை கிராம மக்கள் எதிர்பார்ப்பு

கூடுதல் பஸ்கள் தேவை கிராம மக்கள் எதிர்பார்ப்பு

கூடுதல் பஸ்கள் தேவை கிராம மக்கள் எதிர்பார்ப்பு

கூடுதல் பஸ்கள் தேவை கிராம மக்கள் எதிர்பார்ப்பு

ADDED : ஜூலை 14, 2024 11:15 PM


Google News
பல்லடம்:பல்லடம்- - பொள்ளாச்சி வழித்தடத்தில், காமநாயக்கன்பாளையம், சுல்தான்பேட்டை, காட்டம்பட்டி, சந்திராபுரம்; பல்லடம் - -உடுமலை வழித்தடத்தில், சித்தம்பலம், கேத்தனுார், மந்திரிபாளையம் குள்ளம்பாளையம், வாவிபாளையம், ஜல்லிப்பட்டி, செஞ்சேரிப்புத்துார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. கிராமங்களில் இருந்து, ஏராளமான தொழிலாளர்கள், தினசரி, திருப்பூர், பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பனியன் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்கின்றனர். கோவை, திருப்பூர் பகுதிகளில் உள்ள கல்லுாரிகளுக்கும் எண்ணற்ற மாணவ மாணவியர் சென்று வருகின்றனர். தினசரி இவ்வழித்தடங்களில் இயங்கும் பெரும்பாலான அரசு - தனியார் பஸ்கள், காலை மற்றும் மாலை நேரங்களில் நிரம்பி வழிந்தே செல்கின்றன.

பொதுமக்கள் கூறுகையில், ''காலை மற்றும் மாலை நேரங்களில், பெரும்பாலான பஸ்கள் கிராமங்களில் நிற்காமல் செல்கின்றன. வேலைக்குச் செல்பவர்கள், மாணவ மாணவியர் பாதிக்கப்படுகின்றனர். சிலர், டூவீலர்களிலேயே செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் கூடுதல் செலவு ஏற்படுவதுடன், தேவையற்ற மன உளைச்சல் ஏற்படுகிறது. இரண்டு வழித்தடங்களிலும், கூடுதல் பஸ்களை இயக்குவதுடன், வழித்தட கிராமங்களில் நின்று செல்ல அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us