Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இலவசமாக கட்டடம் வழங்க தயார் கால்நடை மருந்தகம் அமையுமா?

இலவசமாக கட்டடம் வழங்க தயார் கால்நடை மருந்தகம் அமையுமா?

இலவசமாக கட்டடம் வழங்க தயார் கால்நடை மருந்தகம் அமையுமா?

இலவசமாக கட்டடம் வழங்க தயார் கால்நடை மருந்தகம் அமையுமா?

ADDED : ஜூலை 14, 2024 11:15 PM


Google News
Latest Tamil News
பல்லடம்:பல்லடம் ஒன்றியம், பணிக்கம்பட்டி கிராமத்தில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கால்நடைகளுக்கு ஏற்படும் பல்வேறு நோய் பாதிப்புகள், தடுப்பூசி போடுதல், பிரசவம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக, விவசாயிகள், அரசு கால்நடை மருந்தகத்தை நாடுகின்றனர்.

விவசாயிகள் கூறியதாவது:

பணிக்கம்பட்டி கிராமத்தில் அரசு கால்நடை மருந்தகம் வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். தமிழக அரசு, கால்நடை துறை அதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தற்காலிக கால்நடை மருந்தகம் அமைப்பதற்காக கோவில் கட்டடத்தையும் வழங்க ஊர் மக்கள் தயாராக உள்ளனர். கால்நடை துறை, அமைச்சர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்துக்கு ஏற்கனவே தெரியப்படுத்தி உள்ளோம். தற்போது 7 கி.மீ., தொலைவில் உள்ள செம்மிபாளையம் மருந்தகம் செல்ல வேண்டி உள்ளது. நேர விரயம், பொருட்செலவு ஏற்படுகிறது.கால்நடை மருந்தகம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

---

கால்நடை மருந்தகம் அமைப்பதற்காக, ஊர் மக்கள் வழங்க தயாராக உள்ள கட்டடம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us