Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பார்வை குறைபாடுள்ளோர் கிரிக்கெட் அணி தேர்வு போட்டி

பார்வை குறைபாடுள்ளோர் கிரிக்கெட் அணி தேர்வு போட்டி

பார்வை குறைபாடுள்ளோர் கிரிக்கெட் அணி தேர்வு போட்டி

பார்வை குறைபாடுள்ளோர் கிரிக்கெட் அணி தேர்வு போட்டி

ADDED : அக் 01, 2025 12:07 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்; தமிழக அணிக்காக விளையாடவுள்ள பார்வை குறைபாடுள்ளோருக்கான கிரிக்கெட் அணி தேர்வு, திருப்பூரில் துவங்கியது.

தமிழ்நாடு பார்வையற்றோர் கிரிக்கெட் சங்கம் சார்பில், தமிழக அணிக்கான பார்வையற்றோர் கிரிக்கெட் அணி தேர்வு, திருப்பூர் கணியாம்பூண்டியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நேற்று துவங்கியது. சிறப்பு விருந்தினராக, ரோட்டரி மாவட்ட ஆளுநர் தனசேகர் பங்கேற்று பேசினார்.

பின், தேர்வு போட்டிகளை துவக்கி வைத்தார். ரோட்டரி ஸ்மார்ட் சிட்டி தலைவர் அருள்செல்வம், செயலாளர் பொம்முசாமி, செயலாளர் ேஹமந்த் ஜெயின், பொருளாளர் செல்வம், 'நிதிலயம்' சிறப்பு பள்ளி காயத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தேர்வு செய்யப்பட்ட, 33 பார்வை குறைபாடுள்ள வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

அவர்களில் இருந்து சிறந்த வீரர்கள், மாநில அணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். முன்னதாக, ஏ.வி.பி., கல்லுாரி மாணவியர், பார்வையற்ற வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், தங்கள் கண்களை கட்டிக் கொண்டு, அவர்களுடன் கிரிக்கெட் விளையாடினர். ரோட்டரி கவர்னர் உள்ளிட்டோரும் கண்களை கட்டி, அவர்களுடன் விளையாடினர். இதற்கான ஏற்பாடுகளை, தமிழ்நாடு பார்வையற்றோர் கிரிக்கெட் சங்க மாநில பொது செயலர் மகேந்திரன், டார்வின் மோசஸ் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us