/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஒயர்மேன் தகுதி தேர்வு விண்ணப்பிக்க அழைப்பு ஒயர்மேன் தகுதி தேர்வு விண்ணப்பிக்க அழைப்பு
ஒயர்மேன் தகுதி தேர்வு விண்ணப்பிக்க அழைப்பு
ஒயர்மேன் தகுதி தேர்வு விண்ணப்பிக்க அழைப்பு
ஒயர்மேன் தகுதி தேர்வு விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : செப் 25, 2025 12:25 AM
திருப்பூர்: திருப்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் பிரபு வெளியிட்டுள்ள அறிக்கை:
வரும் டிச. 13, 14 ஆகிய தேதிகளில், மின் கம்பியாள் உதவியாளர் (ஒயர்மேன் ஹெல்ப்பர்) தகுதி தேர்வு நடைபெற உள்ளது. மின்கம்பியாள் பிரிவில் பயிற்சி பெற்று, தேறியவர்கள், தேசிய புனரமைப்பு திட்டத்தின்கீழ் நடத்தப்பட்ட மின்சார பணியாளர் மற்றும் கம்பியாள் தொழில் பிரிவுகளில் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஐந்து ஆண்டுக்கு குறையாத மின் ஒயரிங்கில் செய்முறை அனுபவம் உள்ளவராகவும், விண்ணப்பிக்கும் நாளில், 21 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. தேர்வுக்கான விண்ணப்ப படிவத்தை, http://skilltraining.tn.gov.in என்கிற இணையதளத்திலிருந்து பதிவேற்றம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வருக்கு, அக்., 10ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.