Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

ADDED : செப் 25, 2025 12:25 AM


Google News
திருப்பூர்: கலெக்டர் மனிஷ் நாரணவரே வெளியிட்டுள்ள அறிக்கை:

பிரதமரின் இளம் சாதனையாளர்களுக்கான (ஒய்.ஏ.எஸ்.ஏ.எஸ்.வி.ஐ.,) கல்வி உதவித்தொகைக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும்வகையில், பிரதமரின் கல்வி உதவித்திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. 2025 - 26ம் ஆண்டுக்கு, தேசிய கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க, பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் படிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

இந்த திட்டத்துக்கான பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு, 2.50 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்; தகுதியான மாணவர்கள், வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் விண்ணப்பங்களை, வரும் அக். 15ம் தேதிக்குள் சரிபார்க்கவேண்டும். இந்த திட்டத்தில், கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவர்கள், தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில், http://scholarships.gov.in என்கிற இணையதளத்தில் பதிவு செய்து, 2025 - 26ம் ஆண்டுக்கான விண்ணப்பத்தை புதுப்பிக்க வேண்டும்.

புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் ஒன்பதாம் வகுப்பு, பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள், தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில், தங்கள் மொபைல் எண், ஆதார் விவரங்களை உள்ளீடு செய்யவேண்டும். ஓ.டி.பி.,யை வழங்கி, உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து, கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us