Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 72 கடைகளில் விதிமீறல்கள் தொழிலாளர்துறை ஆய்வு

72 கடைகளில் விதிமீறல்கள் தொழிலாளர்துறை ஆய்வு

72 கடைகளில் விதிமீறல்கள் தொழிலாளர்துறை ஆய்வு

72 கடைகளில் விதிமீறல்கள் தொழிலாளர்துறை ஆய்வு

ADDED : அக் 07, 2025 09:05 PM


Google News
- நமது நிருபர் -

மாவட்டத்தில், 84 நிறுவனங்களில் தொழிலாளர் நலத்துறையினர் நடத்திய ஆய்வில், 72 கடைகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.

திருப்பூர், தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) காயத்ரி தலைமையில், தொழிலாளர் துணை மற்றும் உதவி கமிஷனர்கள், திருப்பூர் நகரம், காங்கயம், தாராபுரம், உடுமலை பகுதிகளில் உள்ள கடைகள், வணிக மற்றும் உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில், தேசிய பண்டிகை விடுமுறை நாளன்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், 35 கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டதில், 25 கடை, நிறுவனங்களில் முரண்பாடுகள் தெரிய வந்துள்ளது. 49 உணவு நிறுவனங்களில் ஆய்வு செய்த போது, 47 நிறுவனங்களில் விதிமீறல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

'மொத்தம், 84 நிறுவனங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், 72 நிறுவனங்களில் முரண்பாடுகள் உறுதி செய்யப்பட்டது; அந்நிறுவன உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, தொழிலாளர் நலத்துறையினர் தெரிவித்தனர்.

விதிமீறல் என்ன?: தேசிய பண்டிகை விடு முறை தினத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, இரட்டிப்பு சம் பளம் வழங்க வேண்டும் அல்லது, சம்பளத்துடன் மாற்று விடுமுறை அளிக்க வேண்டும். இதுதொடர்பான விபரங்களை, தொழிலாளர் துணை ஆய்வாளர் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்களுக்கு, 24 மணி நேரத்திற்கு முன்பாக தெரிவிக்க வேண்டும். அவ்வாறு, தகவல் தெரிவிக்காமல் பணியமர்த்தியிருந்தால், அந்நிறு வனத்தினர் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us