/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ காவலாளி கணக்கில் பணம் அமலாக்க துறையினர் சோதனை காவலாளி கணக்கில் பணம் அமலாக்க துறையினர் சோதனை
காவலாளி கணக்கில் பணம் அமலாக்க துறையினர் சோதனை
காவலாளி கணக்கில் பணம் அமலாக்க துறையினர் சோதனை
காவலாளி கணக்கில் பணம் அமலாக்க துறையினர் சோதனை
ADDED : செப் 25, 2025 12:43 AM
ஆம்பூர்:ஆம்பூரில், தோல் தொழிற்சாலை காவலாளி வீட்டில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு, முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர், மு.கா., கொல்லை பகுதியை சேர்ந்தவர் சபீர் அகமத், 40. தனியார் தொழிற்சாலையில், இரவு காவலாளி. இவரது வங்கி கணக்கில், கோடிக்கணக்கில் பண பரிவர்த்தனை நடந்தது தெரிந்தது.
இதையடுத்து, அவரது வீட்டில், சென்னை ஆயிரம்விளக்கு பகுதியிலிருந்து வந்த அமலாக்கத்துறை உதவி இயக்குநர் மோகித் தலைமையிலான, ஏழு பேர் குழுவினர் நேற்று சோதனை நடத்தினர். இதில், முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
நேற்று காலை, 9:00 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு, 7:00 மணி வரை தொடர்ந்தது. சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் அவரது வீட்டில் இருந்த கணினியிலுள்ள விபரங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் எடுத்து சென்றனர்.