Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'வனத்துக்குள் திருப்பூர்' பசுமை திட்டம் ஏ.வி.பி. அறக்கட்டளை ரூ.6.37 லட்சம் உதவி

'வனத்துக்குள் திருப்பூர்' பசுமை திட்டம் ஏ.வி.பி. அறக்கட்டளை ரூ.6.37 லட்சம் உதவி

'வனத்துக்குள் திருப்பூர்' பசுமை திட்டம் ஏ.வி.பி. அறக்கட்டளை ரூ.6.37 லட்சம் உதவி

'வனத்துக்குள் திருப்பூர்' பசுமை திட்டம் ஏ.வி.பி. அறக்கட்டளை ரூ.6.37 லட்சம் உதவி

ADDED : செப் 25, 2025 12:20 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்: 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் மரம் வளர்ப்பு பணிக்கு, 'ஒரு மாணவருக்கு ஒரு மரம்' என்ற வகையில், ஏ.வி.பி., கல்வி அறக்கட்டளை சார்பில், 6.37 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.

வெற்றி அறக்கட்டளை சார்பில், 'வனத்துக்குள் திருப்பூர்' என்ற மாபெரும் மரம் வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த, 2015 முதல், 22 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படுகிறது; இந்தாண்டில், மூன்று லட்சம் இலக்குடன் துவங்கிய பயணம், 2 லட்சத்தை நெருங்கியுள்ளது.

இத்திட்ட பணிகளுக்கு, பல்வேறு அமைப்புகளும், பங்களிப்பு செய்கின்றன. குறிப்பாக, ஏ.வி.பி., கல்வி அறக்கட்டளை சார்பில், ஒரு மாணவருக்கு ஒரு மரம் என்ற வகையில், ஆண்டு தோறும் பங்களிப்பை செலுத்தி, பசுமைப்பணியை ஊக்குவித்து வருகின்றனர். அதன்படி, 5வது ஆண்டாக, 6.37 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட அலுவலகத்துக்கு சென்ற ஏ.வி.பி., அறக்கட்டளை தலைவர் கார்த்திகேயன், தாளாளர் லதா, 'இன்ட்ராக்ட் கிளப்' நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் குழு, காசோலையை வெற்றி அறக்கட்டளையினரிடம் வழங்கினர்.

இதுகுறித்து வெற்றி அறக்கட்டளை தலைவர் சிவராம் கூறியதாவது:

கடந்த, 35 ஆண்டு களாக, திருப்பூர் சுற்றுப் பகுதிகளை சேர்ந்த குழந்தைகளுக்கு, தரமான கல்வியை வழங்கி வருகிறது, ஏ.வி.பி., கல்வி குழுமம், ஏ.வி.பி., கல்வி அறக்கட்டளை சார்பில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில் மரம் வளர்க்கவும், பெரிய பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.

கடந்த, 2021ம் ஆண்டுமுதல், ஒவ்வொரு ஆண்டும், 'ஒரு மாணவருக்கு ஒரு மரம்' என்ற வகையில், பள்ளியில் பயிலும், 8,000 மாணவர்களின் பங்களிப்பாக, அறக்கட்டளை சார்பில் மரம் வளர்க்க நிதியுதவி வழங்கி வருகின்றனர்.

ஏ.வி.பி., அறக்கட்டளை நிறுவனர் அருள்ஜோதி நினைவாக, தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக, 6.37 லட்சம் ரூபாய் வழங்கி பசுமைப்பணிக்கு பாதுகாவலராக நிற்கின்றனர்.

அத்துடன், மாணவர்களுக்கான, 'இன்டராக்ட் கிளப்' வாயிலாக, மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, கூடுதலாக, 350 மாணவ, மாணவியரின் பங்களிப்பையும் இந்தாண்டு வழங்கி, பெருமை சேர்த்துள்ளனர். இயற்கை விவசாயம், மரம் வளர்ப்பு, ஆடு - மாடு வளர்ப்பு, மாநகராட்சி அறிவியல் பூங்கா என, தொடர்ந்து, ஏ.வி.பி., பள்ளி மாணவ, மாணவியரின் கல்விப்பயணமும் தொடர்ந்து வருகிறது.

பொதுவாக, கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லுாரிகள், மாணவருக்கு கல்வியறிவை வழங்குவது வழக்கம். எதிர்கால துாண்களாகிய இன்றைய மாணவர்கள் மனதிலும், மரம் வளர்ப்பு என்ற விதை விதைக்கப்படுவதால், அவர்களது எதிர்காலமும் பசுமையாகவும், செழுமையாகவும் அமையும்.

இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us