Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/வேலூர்/ திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய ராணுவ வீரர் உட்பட 2 பேர் கைது

திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய ராணுவ வீரர் உட்பட 2 பேர் கைது

திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய ராணுவ வீரர் உட்பட 2 பேர் கைது

திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய ராணுவ வீரர் உட்பட 2 பேர் கைது

ADDED : செப் 16, 2025 02:21 AM


Google News
வேலுார், வேலுார் அருகே, திருமணம் செய்து கொள்வதாக கூறி, பெண்ணை ஏமாற்றிய, ராணுவ வீரர் உள்பட இருவரை, போலீசார் கைது செய்தனர்.

வேலுார் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த பங்களாமேடு பகுதியை சேர்ந்தவர் வீரக்குமார், 31. ராஜஸ்தான் மாநிலத்தில், ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த, 2022ம் ஆண்டு முகநுால் மூலம், வேலுார் அடுத்த பென்னாத்துாரை சேர்ந்த, 27, வயது பெண் அறிமுகமாகி, காதலித்தனர். இருவரும் மொபைல்போனில் பேசியும், விடுமுறையில் வீரகுமார் ஊருக்கு வரும்போது நேரில் சந்தித்தும், காதலை வளர்த்தனர். அப்போது வீரகுமார், விரைவில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பல முறை தனிமையில் இருந்தார். மேலும், அப்பெண்ணிடம் பல்வேறு தேவைகளுக்காக, 35 லட்சம் ரூபாய் வாங்கினார். அதன்பின், திருமணம் செய்து கொள்ளாமல் காலம் கடத்திய நிலையில், அப்பெண்ணிடம் பேசுவதை தவிர்த்தார். அதிர்ச்சியடைந்த பெண் கேட்டபோது, வீரக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்து இளம்பெண் புகார் படி, வேலுார் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து, வீரக்குமார், அவரது தம்பி கவிக்குமார், 29, உட்பட, 4 பேர் மீது வழக்குப்பதிந்து, தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த வீரக்குமார் மற்றும் கவிக்குமார் ஆகியோரை கைது செய்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us