Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பறிமுதல் செய்த மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக புகார் 3 போலீஸ் ஏட்டுக்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

பறிமுதல் செய்த மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக புகார் 3 போலீஸ் ஏட்டுக்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

பறிமுதல் செய்த மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக புகார் 3 போலீஸ் ஏட்டுக்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

பறிமுதல் செய்த மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக புகார் 3 போலீஸ் ஏட்டுக்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

ADDED : ஜூன் 27, 2024 03:27 AM


Google News
விழுப்புரம்: திண்டிவனத்தில், பறிமுதல் செய்த கடத்தல் மதுபாட்டில்களை விற்றதாக எழுந்த புகாரில், மூன்று போலீஸ் ஏட்டுகள் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலையத்தில், முருகானந்தம், மகேஷ், தினகரன் ஆகியோர் ஏட்டுகளாக பணிபுரிகின்றனர். இவர்கள், கடந்த சில தினங்களுக்கு முன்பு பைக்கில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 3 வாலிபர்களை பிடித்து, ரூ.10 ஆயிரம் மதிப்பிலான உயர்ரக மதுபானங்களை பறிமுதல் செய்தனர்.

அந்த வாலிபர்களை போலீசார் மிரட்டி, ரூ. 5 ஆயிரம் மாமுல் வாங்கியதோடு, பறிமுதல் செய்த மதுபானங்களை கள்ளச்சந்தையில் விற்றதாக அவர்கள் மீது புகார் கூறப்பட்டது. இந்த புகார், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலானது.

இதுபற்றி, விழுப்புரம் எஸ்.பி.,யின் கவனத்திற்கு சென்றதையடுத்து, ஏட்டுகள் முருகானந்தம், மகேஷ், தினகரன் ஆகியோரை விழுப்புரம் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்.பி., தீபக் சிவாச் உத்தரவிட்டார். மேலும், இந்த புகார் குறித்து மதுவிலக்கு டி.எஸ்.பி., இளங்கோ விசாரித்து வருகிறார்.

விசாரணை முடிவில், உண்மை நிருபிக்கப்பட்டால் அந்த ஏட்டுகள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us