ADDED : ஜூலை 25, 2024 06:28 AM
விழுப்புரம்: விழுப்புரம் முத்தோப்பு திடீர் குப்பத்தை சேர்ந்தவர் சுந்தர் மகள் கல்யாணி, 20; சேலம் தனியார் நர்சிங் கல்லுாரியில் பி.எஸ்.சி., நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
முதுகு வலி பிரச்னையால் அவதிப்பட்டு வந்த இவர், கடந்த 20ம் தேதி முதுகு வலி ஏற்பட்டதால், விரக்தியில், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
அவரை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். விழுப்புரம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.