/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு
ADDED : ஜூலை 25, 2024 06:27 AM
விழுப்புரம்: திண்டிவனம் அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி, 10ம் வகுப்புவரை படித்துவிட்டு, கட்டட தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். அங்கு, அவருடன் பணியாற்றி வந்த, தனியல் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக்,19; என்பவர், அந்த சிறுமியை காதலித்து, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இதற்கிடையே, அந்த பெண் கர்ப்பமடைந்து, மயிலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். அங்கிருந்து கிடைத்த தகவலின் பேரில், சமூகநலத்துறை விரிவாக்க அலுவலர் கலா கொடுத்த புகாரின் பேரில், திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசார், நேற்று கார்த்திக் மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.