Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மகள், பேத்தி மாயம் போலீசில் தாய் புகார்

மகள், பேத்தி மாயம் போலீசில் தாய் புகார்

மகள், பேத்தி மாயம் போலீசில் தாய் புகார்

மகள், பேத்தி மாயம் போலீசில் தாய் புகார்

ADDED : ஜூலை 26, 2024 04:54 AM


Google News
விழுப்புரம்: காணை அருகே மகள், பேத்தியை காணவில்லை என போலீசில், தாய் புகார் அளித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், சாவடிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் மனைவி அரசி, 23; திருமணமாகி கீர்த்தனா, 4; என்ற மகள் உள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் அரசி தனது கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மகளுடன் காணை அடுத்த தெளிமேடு கிராமத்தில் உள்ள தனது தாய் முத்தம்மாள் வீட்டில் வசித்து வருகிறார்.

கடந்த 22ம் தேதி அரசி தனது மகளோடு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை.

முத்தம்மாள் அளித்த புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us