/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ 'ஊமை ஜனங்கள் பேசப் போறாங்க' ராமதாஸ் பூடகப் பேச்சு 'ஊமை ஜனங்கள் பேசப் போறாங்க' ராமதாஸ் பூடகப் பேச்சு
'ஊமை ஜனங்கள் பேசப் போறாங்க' ராமதாஸ் பூடகப் பேச்சு
'ஊமை ஜனங்கள் பேசப் போறாங்க' ராமதாஸ் பூடகப் பேச்சு
'ஊமை ஜனங்கள் பேசப் போறாங்க' ராமதாஸ் பூடகப் பேச்சு
ADDED : ஜூலை 26, 2024 03:34 AM
திண்டிவனம்: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தன், 86வது பிறந்த நாளை முன்-னிட்டு நேற்று நடந்த விழாவில் பேசியதாவது:
தமிழகத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கேட்டு வருகிறோம். முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, வன்னியர்களுக்கு10.5 சதவீத இட-ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தேன். ஸ்டாலினும் சரி என தலையாட்டினார். தமிழக மக்கள் இன்னும் இரண்டு மாதத்தில் இடஒதுக்கீடு குறித்து பேசப் போகிறார்கள். ஊமை ஜனங்கள் பேசப் போகிறார்கள். நாடே கிடுகிடுக்க, நாடே ஸ்தம்பிக்க. ஊமை ஜனங்களா இருந்த மக்களுக்கு எப்படி இவ்வளவு துணிச்சல், தைரியம் வந்தது என்று மற்றவங்க பேசப் போகி-றார்கள். ஆட்சியில் இருக்கிறவர்களின் குடை சாய, கோலேச்சி-யவர்கள் போதுமடா சாமி என்று விட்டு ஓட, ஊமை ஜனங்க-ளுக்கு தைரியம் வர, அவர்கள் பேசப் போகிறார்கள். அப்போது இந்த நாடு தாங்காது.
ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துணும் என்று உங்களிடம் கேட்டால், நீங்கள் மத்திய அரசை காட்டுகின்றீர்கள். அதற்கு எதற்கு முதல்வர் பதவி. இவ்வாறு ராமதாஸ் பேசினார்.