Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ குழந்தைகளுடன் மனைவி மாயம் போலீசில் கணவர் புகார் 

குழந்தைகளுடன் மனைவி மாயம் போலீசில் கணவர் புகார் 

குழந்தைகளுடன் மனைவி மாயம் போலீசில் கணவர் புகார் 

குழந்தைகளுடன் மனைவி மாயம் போலீசில் கணவர் புகார் 

ADDED : ஜூன் 27, 2024 11:39 PM


Google News
செஞ்சி: இரண்டு குழந்தைகளுடன் மனைவியைக் காணவில்லை என போலீசில், கணவர் புகார் அளித்துள்ளார்.

அனந்தபுரம் அடுத்த உடையாநத்தம், குளிர் சுனை கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மகன் நாகப்பன், 39; இவரது மனைவி கவுதமி, 36; இவர்களுக்கு 14 வயதில் மகளும், 6 வயதில் மகனும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 17ம் தேதி முதல், கவுதமி மற்றும் இரண்டு குழந்தைகளையும் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து நாகப்பன் அளித்த புகாரின் பேரில், அனந்தபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us