Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தீ விபத்தில் மூதாட்டி பலி 

தீ விபத்தில் மூதாட்டி பலி 

தீ விபத்தில் மூதாட்டி பலி 

தீ விபத்தில் மூதாட்டி பலி 

ADDED : ஜூன் 27, 2024 11:40 PM


Google News
திண்டிவனம்: திண்டிவனம் அருகே மண்ணெண்ணெய் விளக்கிலிருந்து தீ பரவியதால், மூதாட்டி தீயில் கருகி இறந்தார்.

திண்டிவனம் அடுத்த பெரப்பேரி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரராகவன் மனைவி மகாலட்சுமி, 76; இவரது கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். இதனால் மூதாட்டி வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த 25ம் தேதி இரவு 7:00 மணியளவில், மின்சாரம் இல்லாததால், மண்ணெண்ணெய் விளக்கை ஏற்றிய போது, மூதாட்டி மீது தீ பரவியது.

மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு, அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us