Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பிரியாணி மாஸ்டரை தாக்கிய வாலிபர் கைது

பிரியாணி மாஸ்டரை தாக்கிய வாலிபர் கைது

பிரியாணி மாஸ்டரை தாக்கிய வாலிபர் கைது

பிரியாணி மாஸ்டரை தாக்கிய வாலிபர் கைது

ADDED : ஜூலை 16, 2024 12:12 AM


Google News
விழுப்புரம்: விழுப்புரத்தில் பிரியாணி மாஸ்டரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம், திடீர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அனிபா மகன் சலிம்பீன், 48; இவர், புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டலில் பிரியாணி மாஸ்டராக பணிபுரிகிறார்.

கடந்த 13ம் தேதி சென்னை, எண்ணுார் பகுதியை சேர்ந்த சசிக்குமார் மகன் பாலாஜி என்கிற ேஹமச்சந்திரன், 24; என்பவர் ஓட்டலில் சாப்பிட்டுள்ளார். சாப்பிட்டதற்கு 60 ரூபாய் தரும்படி சலிம்பீன் கேட்ட போது, பணம் தர முடியாது எனக்கூறி பாலாஜி தாக்கியுள்ளார்.

இதனை தட்டிக்கேட்ட சென்னை, மேடவாக்கத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் மனைவி லட்சுமி, 32; ஆகியோரை திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பின், டேபிளில் இருந்த ரூ.500 மதிப்புள்ள பரோட்டாவை சேதப்படுத்தினார்.

இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்பரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து பாலாஜியை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us