Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வேளாண் உதவி இயக்குநர் 'திடீர்' ஆய்வு

வேளாண் உதவி இயக்குநர் 'திடீர்' ஆய்வு

வேளாண் உதவி இயக்குநர் 'திடீர்' ஆய்வு

வேளாண் உதவி இயக்குநர் 'திடீர்' ஆய்வு

ADDED : அக் 01, 2025 11:05 PM


Google News
Latest Tamil News
விழுப்புரம்: உரங்களை அதிக விலைக்கு விற்றால் உர உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் அடுத்த திருவாமாத்துாரில் உள்ள உரக்கடைகளில் வேளாண் தரக்கட்டுப்பாடு உதவி இயக்குநர் விஜயகுமார் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

மாவட்டத்தில் தற்போது, பயிர்களுக்கு தேவையான யூரியா 3661 மெ.டன், டி.ஏ.பி., 2468 மெ.டன், பொட்டாஷ் 1198 மெ.டன், காம்ப்ளெக்ஸ் 5598 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் 1662 மெ.டன் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து மொத்த மற்றும் சில்லறை உரிமம் பெற்ற உர விற்பனையாளர்கள் மானிய உரங்களை பிற மாவட்டங்களுக்கு விற்பனை செய்வதோ அல்லது பிற மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்வதோ கூடாது.

இது தொடர்பாக ஆய்வின்போது கண்டறியப்பட்டாலோ அல்லது புகார் ஏதும் பெறப்பட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

உர விற்பனையாளர்கள் அனுமதி பெறாமல் கலப்பு உரங்களை கொள்முதல் செய்வதும், விவசாயிகளுக்கு விற்பனை செய்வதும் கூடாது. உர மூட்டையின் மேல் அச்சிடப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்குமேல் விற்பனை செய்யக்கூடாது.

உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தல், விவசாயம் அல்லாத தேவைகளுக்கு மானிய உரங்களை விற்பனை செய்தல், உரம் கடத்தல், பதுக்கல் ஆகிய செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மீறினால் உர உரிமம் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us