Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பஸ்ஸில் பெண்ணிடம் செயின் திருட்டு

பஸ்ஸில் பெண்ணிடம் செயின் திருட்டு

பஸ்ஸில் பெண்ணிடம் செயின் திருட்டு

பஸ்ஸில் பெண்ணிடம் செயின் திருட்டு

ADDED : அக் 09, 2025 11:42 PM


Google News
செஞ்சி: அரசு பஸ்ஸில் பயணம் செய்த பெண்ணிடம் மூன்று சவரன் செயினை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

செஞ்சி அடுத்த அம்மன் குளத்து மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் மனைவி கவுசிகா, 27; இவர், கடந்த, 8ம் தேதி பொருட்கள் வாங்க செஞ்சிக்கு வந்தார்.

மீண்டும் மதியம் 1:10 மணியளவில், செஞ்சியில் இருந்து ரெட்டனை செல்லும் அரசு டவுன் பஸ்சில் ஊருக்கு சென்றார். ஈச்சூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது அவர் கழுத்தில் இருந்த மூன்று சவரன் செயின் திருடு போனது தெரிந்தது. செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us