ADDED : அக் 24, 2025 03:21 AM

திண்டிவனம்: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக க னமழை பெய்து நீர்பிடிப்பு பகுதிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில், திண்டிவனம் போலீஸ் நிலைய எல்லை பகுதிகளில் பருவ மழை மீட்பு பணிக்கு போலீசார் பொக்லைன், கயிறு, காற்று பிடிக்கப்பட்ட டியூப் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் வைத்துள்ளனர்.
இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப் இன்ஸ்பெக்டர் கவுதம் உள்ளிட்ட போலீசார் மீட்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.


