ADDED : அக் 14, 2025 06:55 AM
திண்டிவனம்; முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திண்டிவனம் அடுத்த விட்டலாபுரத் தைச் சேர்ந்தவர் பெரியசாமி, 55; இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நுரையீரல் அறுவை சிகிச்சை செய்து கொண்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த சில நாட்களாக வலி அதிகமானதால் மனமுடைந்த அவர், கடந்த 11ம் தேதி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று முன்தினம் இறந்தார். ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


