Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பைக்கிற்கு தீ வைப்பு போலீஸ் விசாரணை

பைக்கிற்கு தீ வைப்பு போலீஸ் விசாரணை

பைக்கிற்கு தீ வைப்பு போலீஸ் விசாரணை

பைக்கிற்கு தீ வைப்பு போலீஸ் விசாரணை

ADDED : அக் 12, 2025 04:22 AM


Google News
விழுப்புரம் : விழுப்புரத்தில் அலுவலகத்தில் நிறுத்தி வைத்திருந்த பைக்கிற்கு தீ வைத்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் அடுத்த கோலியனுாரைச் சேர்ந்தவர் நாகராஜ் மகன் குருநாதன், 39; இவர், விழுப்புரம் கலைஞர் நகர் பகுதியில் உள்ள தனியார் மார்க்கெட்டிங் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 8ம் தேதி இரவு, வழக்கம் போல் தனது பைக்கை அலுவலகத்தின் கீழ் பகுதியில் நிறுத்திவிட்டு, அலுவலகத்தில் இருந்துள்ளார்.

அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர், பைக்கிற்கு தீ வைத்துவிட்டு தப்பியோடினர். சிறிது நேரத்தில் அந்த பைக் முழுவதும் எரிந்து சேதமானது.

குருநாதன், அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us