விழுப்புரம்: வளவனுார் அருகே சிறுமி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த வளவனுார் காந்தி நகரைச் சேர்ந்தவர் வாசுதேவன், 38; இவரது மகள் ஸ்ரீவித்யா, 17; பத்தாம் வகுப்பு படித்துவிட்டு, வீட்டில் இருந்தார். கடந்த 8ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.