/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ அரசு வேலை வாங்கி தருவதாக 3 பேரிடம் ரூ.10.25 லட்சம் மோசடி அரசு வேலை வாங்கி தருவதாக 3 பேரிடம் ரூ.10.25 லட்சம் மோசடி
அரசு வேலை வாங்கி தருவதாக 3 பேரிடம் ரூ.10.25 லட்சம் மோசடி
அரசு வேலை வாங்கி தருவதாக 3 பேரிடம் ரூ.10.25 லட்சம் மோசடி
அரசு வேலை வாங்கி தருவதாக 3 பேரிடம் ரூ.10.25 லட்சம் மோசடி
ADDED : ஜூன் 13, 2024 02:47 AM
அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அரசு வேலை வாங்கித் தருவதாக 3 பேரிடம் ரூ. 10.25 லட்சம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
விருதுநகர் அல்லம்பட்டி அனுமன் நகரை சேர்ந்தவர் தனலட்சுமி 30. தற்போது அருப்புக்கோட்டை இந்திரா நகரில் குடியிருந்து வருகிறார். கணவர் முனியராஜ் அருப்புக்கோட்டையில் ஒர்க் ஷாப் நடத்தி வந்தார். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் முனியராஜ் இறந்து விட்டார். முனியராஜின் ஒர்க் ஷாப்பில் அருப்புக்கோட்டை அருகே பெரியவள்ளிகுளத்தை சேர்ந்த பன்னீர் செல்வம்,48, தனது வாகனத்தை வேலைக்கு விட வந்துள்ளார்.
அவர் தான் வருவாய் துறையில் வேலை பார்ப்பதாக தனலட்சுமியிடம் கூறி, அவருக்கும் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம், தம்பி மகாலிங்கத்திற்கு வேலை வாங்கித் தருவதாக அவரது அம்மாவிடம்
ரூ.2 .75 லட்சம், தனலட்சுமியின் பெரியப்பா மகள் ஜெயலட்சுமியிடம் ரூ. 2.50 லட்சம் என ரூ.10 .25 லட்சம் வாங்கியுள்ளார். ஆனால் வேலை வாங்கி தராமல் மூவரையும் அலைக்கழித்துள்ளார். மூவரும் பன்னீர் செல்வத்திடம் பணத்தை கேட்ட போது அவர் மிரட்டினார். அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.