ADDED : ஜூலை 14, 2024 02:06 AM
விருதுநகர், ஜூலை 14-
விருதுநகர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் மூன்றரை வயது சிறுமி. இவர் ஜூலை 11 இரவு 8:00 மணிக்கு எதிர் வீட்டில் விளையாடி விட்டு திண்ணையில் அமர்ந்திருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சித்தார். இதைப்பார்த்த சிறுமியின் தாய் சத்தம் போட்டதும் சிறுவன் தப்பிச்சென்றார். மகளிர் போலீசார் சிறுவனை போக்சோவில் கைது செய்தனர்.