Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மாவட்டத்தில் குரூப் 2 தேர்வு 3928 பேர் ஆப்சென்ட்

மாவட்டத்தில் குரூப் 2 தேர்வு 3928 பேர் ஆப்சென்ட்

மாவட்டத்தில் குரூப் 2 தேர்வு 3928 பேர் ஆப்சென்ட்

மாவட்டத்தில் குரூப் 2 தேர்வு 3928 பேர் ஆப்சென்ட்

ADDED : செப் 29, 2025 05:26 AM


Google News
Latest Tamil News
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் இருந்து டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்விற்கு 19,084 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் நேற்று நடந்த தேர்வில் 15,156 பேர் பங்கேற்றனர். 3928 பேர் ஆப்சென்ட் ஆகினர்.

அரசு பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் (டி.என்.பி.எஸ்.சி.,) குரூப் 2, குரூப் 2 ஏ ஆகிய பணியிடங்களுக்கான தேர்விற்கு விருதுநகரில் 3634 பேர், அருப்புக்கோட்டை 3829 பேர், ராஜபாளையம் 3389 பேர், சாத்துார் 1752 பேர், சிவகாசி 3360 பேர், ஸ்ரீவில்லிப்புத்துாரில் 3120 பேர் என மொத்தம் 19,084 பேர் விண்ணப்பித்திருந்தனர். விருதுநகர், அருப்புக்கோட்டை, ராஜபாளையம், சாத்துார், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்துார், அதனை சுற்றிய பகுதிகளில் நேற்று நடந்த தேர்வில் 15,156 பேர் பங்கேற்றனர். இதில் 3928 பேர் ஆப்சென்ட் ஆகினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us