Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ காயல்குடி ஆற்றில் தடுப்பணை சேதம்

காயல்குடி ஆற்றில் தடுப்பணை சேதம்

காயல்குடி ஆற்றில் தடுப்பணை சேதம்

காயல்குடி ஆற்றில் தடுப்பணை சேதம்

ADDED : ஜூன் 15, 2025 06:46 AM


Google News
Latest Tamil News
சிவகாசி : வெம்பக்கோட்டை எதிர்க்கோட்டை காயல்குடி ஆற்றில் தடுப்பணை சேதமாகி உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து ராஜபாளையம், மாதாங்கோவில் பட்டி, புலிப்பாறைப்பட்டி, திருவேங்கடபுரம், நதிக்குடி, எதிர்கோட்டை வழியாக காயல் குடி ஆறு சென்று வெம்பக்கோட்டை அணையில் சேர்கிறது. இந்த காயல்குடி ஆற்றினை நம்பி எதிர்கோட்டையில் 400 ஏக்கரில் சோளம், நெல் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகிறது.

இதற்காக எதிர்கோட்டையில் 1994ல் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது. இதனால் இப்பகுதியில் விவசாயம் செழித்ததோடு குடிநீர் ஆதாரமும் கிடைத்து வந்தது. இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை சேதம் அடைந்து விட்டது. இதனால் ஆற்றில் தண்ணீர் வந்தும் அதனை தேக்க முடியாமல் வெளியேறி விடுகிறது.

தற்போது விவசாயத்திற்கு தண்ணீரை பயன்படுத்த முடியவில்லை. குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கோடை மழைக்கு தண்ணீர் வந்தும் தேக்க வழியில்லாமல் வெளியேறிவிட்டது. எனவே உடனடியாக சேதம் அடைந்த தடுப்பணையை சீரமைக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us