Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வெம்பக்கோட்டை அணையில் சீமை கருவேல மரங்கள் அகற்ற விவசாயிகள் எதிர்பார்ப்பு

வெம்பக்கோட்டை அணையில் சீமை கருவேல மரங்கள் அகற்ற விவசாயிகள் எதிர்பார்ப்பு

வெம்பக்கோட்டை அணையில் சீமை கருவேல மரங்கள் அகற்ற விவசாயிகள் எதிர்பார்ப்பு

வெம்பக்கோட்டை அணையில் சீமை கருவேல மரங்கள் அகற்ற விவசாயிகள் எதிர்பார்ப்பு

ADDED : அக் 13, 2025 05:43 AM


Google News
Latest Tamil News
சிவகாசி : வெம்பக்கோட்டை அணையில் பெரும்பான்மையான பகுதியில் சீமைக் கருவேல மரங்கள் ஆக்கிரமித்து இருப்பதால் தண்ணீர் மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். எனவே சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

வெம்பக்கோட்டையில் வைப்பாற்றின் குறுக்கே 1986 ல் அணை கட்டப்பட்டது. 23 அடி உயரம் கொண்ட அணையில் 5 மாதங்கள் உள்ளது. இந்த அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து காயல்குடி, சீவலப்பேரி உள்ளிட்ட கிளை ஆறுகளில் இருந்து தண்ணீர் வருகின்றது. வெம்பக்கோட்டை, சூரார்பட்டி, கோட்டைப்பட்டி, கரிசல்குளம். சல்வார் பட்டி, ஏழாயிரம் பண்ணை, விஜய கரிசல்குளம் உட்பட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3300 ஹெக்டர் பாசன வசதி உடையது.

மேலும் அணையில் இருந்து சிவகாசி மாநகராட்சிக்கு தினமும் ரூ. 20 லட்சம் லிட்டர் குடிநீர் கொண்டு செல்லப்பட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. அணையை சுற்றியுள்ள கிராமப் பகுதியில் கிணற்று பாசனத்திலும் விவசாய பணிகள் நடந்து வருகின்றது. இந்நிலையில் அணையில் பெரும்பான்மையான பகுதியில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளது. தண்ணீர் விரைவிலேயே சீமைக் கருவேல மரங்களால் உறிஞ்சப்பட்டு தண்ணீர் மட்டம் குறைந்து வருகின்றது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

மேலும் கிணற்று பாசனம் பாதிக்கப்படுவதோடு, குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படுகின்றது. எனவே உடனடியாக அணையில் ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us