ADDED : அக் 13, 2025 05:43 AM
வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த் 37. இவர் 2013 முதல் தீயணைப்பு துறை ஊழியராக பணியாற்றி வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக உடல் நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையிலும், நாட்டு மருத்துவத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு அவரது தாய் மாரியம்மாள் எழுப்பியபோது ஆனந்த் எழுந்திரிக்கவில்லை. பின் 108 ஆம்புலன்ஸ் மூலம் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து, டாக்டர் பரிசோதனையில் அவர் உயிரிழந்தது தெரிந்தது. வத்திராயிருப்பு போலீசார் வழக்கு பதிந்தனர்.


