ADDED : அக் 24, 2025 02:26 AM

விருதுநகர்: மூன்று சதவீத அகவிலைப்படியை ரொக்கமாக வழங்க வலியுறுத்தியும், தனியார் பல்கலை சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றியதை கண்டித்தும் விருதுநகரில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் வைரவன் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நிர்வாகிகள் லியாகத் அலி உள்பட பலர் பங்கேற்றனர்.


