ADDED : அக் 24, 2025 02:27 AM
விருதுநகர்: சாத்துார் மதுவிலக்கு போலீசாரால் புதுச்சேரியிலிருந்து 450 மதுபான பாட்டில்கள் கடத்தி வந்த புவனேஸ் (25) என்பவர் கைது செய்யப்பட்டார்.
இவரை எஸ்.பி., கண்ணன் பரிந்துரையின் பேரில், கலெக்டர் சுகபுத்ரா அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரை போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.


