Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஆர்.எல்.ஐ.எம்.எஸ்.,சில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஆர்.எல்.ஐ.எம்.எஸ்.,சில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஆர்.எல்.ஐ.எம்.எஸ்.,சில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஆர்.எல்.ஐ.எம்.எஸ்.,சில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ADDED : அக் 14, 2025 03:38 AM


Google News
Latest Tamil News
மதுரை: மதுரை ஆர்.எல். இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் (ஆர்.எல்.ஐ.எம்.எஸ்.,), மதுரை டாட் காம் இன்போவே என்ற ஐ.டி., நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதில் ஆர்.எல்.ஐ.எம்.எஸ்., இயக்குனர் சுப்பிரமணியன், ஐ.டி., நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சி.ஆர். வெங்கடேஷ் கையெழுத்திட்டனர். இதன் மூலம் மாணவர் களுக்கு தொழில்முனைவுத் திறன்கள், டிஜிட்டல் மார்க்கெட்டிங், தொழில்நுட்ப அபிவிருத்தி போன்ற துறைகளில், நடைமுறை பயிற்சி, இன்டர்ன்ஷிப், கூட்டு ஆராய்ச்சி வாய்ப்புகள் வழங்கப் படவுள்ளன.

எம்.பி.ஏ., மாணவர்களிடம் பேசிய சி.ஆர்., வெங்கடேஷ், 'தொழில்முனைவு பயணங்களை பகிர்ந்துகொண்டு புதிய தலைமுறையினர் புதிய சிந்தனைகளுடன் தொழில்முனைவில் முன்னேற வேண்டும்' என ஊக்கமளித்தார். பேராசிரியர்கள் கார்த்திக் பாபு, சிவஜோதி, ஐ.டி., நிறுவன மனித வள மேலாளர் ஹேமலதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us