ADDED : ஜூன் 03, 2025 12:37 AM

விருதுநகர்: விருதுநகர் பி.எஸ்.என்.எல்., பொது மேலாளர் அலுவலகம் முன்பு அகில இந்திய பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் சங்கம் சார்பில் மகாராஷ்டிரா மாநிலத்தில் விருப்ப ஓய்வில் சென்ற 170 எஸ்.சி., எஸ்.டி., ஊழியர்களுக்கு ஓய்வூதிய பணப்பலன்களை வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகி தர்மராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மாநில உதவித் தலைவர் செல்வராஜ், மாவட்ட செயலாளர் புளுகாண்டி, பொருளாளர் பெருமாள்சாமி, துணைச் செயலாளர் முத்துசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.