மணல் திருட்டு: 3 பேர் மீது வழக்கு
மணல் திருட்டு: 3 பேர் மீது வழக்கு
மணல் திருட்டு: 3 பேர் மீது வழக்கு
ADDED : செப் 26, 2025 01:48 AM
நரிக்குடி: திருச்சுழி தாசில்தார் கருப்பசாமி தலைமையில் வருவாய்த் துறையினர் நேற்று பூமாலைப்பட்டி குண்டாற்றில் மண் அள்ளும் இயந்திரம் மூலம் டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்ததை பார்த்தனர்.
அதிகாரிகளை கண்டதும் வாகனங்களை போட்டுவிட்டு தப்பி ஓடினர். ஒரு யூனிட் மணல் இருந்தது. 3 வாகனங்களை பறிமுதல் செய்து திருச்சுழி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் மணல் திருட்டில் ஈடுபட்டது செம்பொன் நெருஞ்சி தங்கபாண்டியன் என தெரிந்தது. அழகர்சாமி வி.ஏ.ஓ., கொடுத்த புகாரின் படி, உரிமையாளர் தங்கப்பாண்டி, டிரைவர் ராமகிருஷ்ணன், 15 வயது சிறுவன் உட்பட 3 பேர் மீது திருச்சுழி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
படம் உண்டு.