Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கொங்கலாபுரத்தில் 30 ஆண்டுகளாக குடிநீர் இல்லை கசியும் நீரை சேகரிக்கும் பரிதாபம்

கொங்கலாபுரத்தில் 30 ஆண்டுகளாக குடிநீர் இல்லை கசியும் நீரை சேகரிக்கும் பரிதாபம்

கொங்கலாபுரத்தில் 30 ஆண்டுகளாக குடிநீர் இல்லை கசியும் நீரை சேகரிக்கும் பரிதாபம்

கொங்கலாபுரத்தில் 30 ஆண்டுகளாக குடிநீர் இல்லை கசியும் நீரை சேகரிக்கும் பரிதாபம்

ADDED : செப் 24, 2025 06:12 AM


Google News
Latest Tamil News
சிவகாசி : சிவகாசி அருகே கொங்கலாபுரத்தில் 30 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பதிக்கப்பட்டுள்ள குழாயில் இருந்து கசியும் தண்ணீரை சேகரித்து குடிக்க பயன்படுத்துகின்றனர்.

சிவகாசி அருகே கொங்கலாபுரத்தில் 900 குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியினருக்கு 30 ஆண்டுகளாகவே குடிநீர் வினியோகம் இல்லை. புழக்கத்திற்கும் தண்ணீர் இல்லாத நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு தொட்டி கட்டப்பட்டு உள்ளூர் போர்வெல் மூலமாக புழக்கத்திற்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகின்றது. ஆனால் இதுநாள் வரையிலும் குடிநீர் வினியோகம் இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் குடம் ரூ. 15 என தண்ணீரை விலைக்கு வாங்கித் தான் பயன்படுத்துகின்றனர்.

மேலும் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் சித்துராஜபுரம் சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் சங்கரன்கோவில் இருந்து கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் பதிக்கப்பட்டு கொங்கலாபுரம் வழியாக செல்கிறது. இந்த குழாயில் லேசாக கசிவு ஏற்பட்டு குடிநீர் வெளியே வருகின்றது. இதனை இப்பகுதி மக்கள் குடிப்பதற்காக சேகரிக்கின்றனர்.

ஒரு குடம் சேகரிக்க 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை ஆகின்றது. வேறு வழியின்றி மக்கள் வெயிலில் பொறுமையாக காத்திருந்து தண்ணீரை எடுக்கின்றனர். எனவே இப்பகுதி மக்களுக்கு உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us