Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாளுக்கு திருப்பதி பட்டு சாற்றல்

ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாளுக்கு திருப்பதி பட்டு சாற்றல்

ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாளுக்கு திருப்பதி பட்டு சாற்றல்

ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாளுக்கு திருப்பதி பட்டு சாற்றல்

ADDED : அக் 11, 2025 03:49 AM


Google News
Latest Tamil News
ஸ்ரீவில்லிபுத்துார்: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இருந்து வழங்கப்பட்ட பட்டு நேற்று ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாளுக்கு சாற்றப்பட்டது.

புரட்டாசி பிரமோற்ஸவம் ஐந்தாம் திருநாளில் திருப்பதி ஏழுமலையான் சாற்றுவதற்காக ஆண்டாள் சூடி களைந்த மாலை, கிளி, பட்டு, மங்கல பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது. இதற்கு எதிர் சீராக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இருந்து ஆண்டாளுக்கு சாற்றுவதற்கு பட்டு வழங்கப்பட்டிருந்தது.

இதனை நேற்று இரவு 7:40 மணிக்கு வெள்ளி குறடு மண்டபத்தில் ரெங்கமன்னாருடன் எழுந்தருளிய ஆண்டாளுக்கு பட்டு சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரை அம்மாள், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us