ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை 20% சரிவு; கண்டுகொள்ளாத தமிழக அரசு
ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை 20% சரிவு; கண்டுகொள்ளாத தமிழக அரசு
ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை 20% சரிவு; கண்டுகொள்ளாத தமிழக அரசு

செயல்பாடு
இப்பிரிவு மாணவர்களுக்காக, 1,143 விடுதிகளும் நடத்தப்படுகின்றன. ஆனாலும், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில், போதிய உள்கட்டமைப்பு வசதி இல்லாததால், இங்கு மாணவர்கள் சேர ஆர்வம் காட்டுவது இல்லை. எனவே, இப்பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து, அரசும் அதை ஏற்றது. ஆனாலும், இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை.
ஆசிரியர்கள் இல்லை!
இது குறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது: தி.மு.க., அரசு பொறுப்பேற்றபின் கடந்த நான்காண்டில் மட்டும், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை 20 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2021 முதல் தற்போது வரை, 18,700 மாணவர்கள், இப்பள்ளிகளில் இருந்து வேறு பள்ளிகளுக்கு மாறியுள்ளனர். அரசின் அலட்சியம் ஒருபுறம் இருந்தாலும், இப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லாததும், மாணவர்களின் எண்ணிக்கை குறைய முக்கிய காரணமாகும்.
அவசியம்
தலைமை ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், கணினி ஆப்பரேட்டர் என, இப்பள்ளிகளுக்கு ஒப்பளிக்கப்பட்ட 6,240 ஆசிரியர் பணியிடங்களில், 1,177 இடங்கள் காலியாக உள்ளன. பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லாத நிலையில், பல இடங்களில் ஒரே ஆசிரியர் அனைத்து வகுப்புகளையும் கவனிக்கும் நிலை உள்ளது.
மாணவர்கள் எண்ணிக்கை
கல்வியாண்டு- மாணவர்கள் எண்ணிக்கை
ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளின் எண்ணிக்கை
மாவட்டம்- பள்ளியின் எண்ணிக்கை