Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/டாக்டர் சுப்பையா கொலை வழக்கு: தண்டனை விதிக்கப்பட்ட 9 பேரை விடுவித்தது உயர்நீதிமன்றம்

டாக்டர் சுப்பையா கொலை வழக்கு: தண்டனை விதிக்கப்பட்ட 9 பேரை விடுவித்தது உயர்நீதிமன்றம்

டாக்டர் சுப்பையா கொலை வழக்கு: தண்டனை விதிக்கப்பட்ட 9 பேரை விடுவித்தது உயர்நீதிமன்றம்

டாக்டர் சுப்பையா கொலை வழக்கு: தண்டனை விதிக்கப்பட்ட 9 பேரை விடுவித்தது உயர்நீதிமன்றம்

UPDATED : ஜூன் 14, 2024 03:06 PMADDED : ஜூன் 14, 2024 10:54 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 பேர் மற்றும் ஆயுள் தண்டனை பெற்ற 2 பேரையும் விடுவித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நரம்பியல் டாக்டர் சுப்பையா; சென்னையில் மருத்துவராக பணிபுரிந்தார். 2013-ம் ஆண்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் போது, அவரை கூலிப்படையினர் வெட்டிக் கொன்றனர்.

நிலப் பிரச்னை தொடர்பாக நடந்த இவ்வழக்கில் ஏழு பேருக்கு துாக்கு தண்டனையும், மூன்று பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து, சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

துாக்கு தண்டனையை உறுதி செய்ய, சென்னை உயர் நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பும், துாக்கு தண்டனையை எதிர்த்து ஏழு பேரும், ஆயுள் தண்டனையை எதிர்த்து இருவரும் மேல்முறையீடு செய்தனர்.

இம்மனுக்கள், நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில், கடந்த சில மாதங்களுக்கு முன் விசாரணைக்கு வந்தன. போலீஸ் தரப்பில், சிறப்பு வழக்கறிஞர் பிரபாகரன் வாதாடினார்.பின், தண்டனை விதிக்கப்பட்டவர்கள் சார்பில், மும்பை வழக்கறிஞர் சவுத்ரி வாதாடினார். இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று( ஜூன் 14) அளித்த தீர்ப்பில், மரண தண்டனை விதிக்கப்பட்ட 9 பேரையும், ஆயுள் தண்டனை பெற்ற 2 பேரையும் விடுவித்து உத்தரவிட்டது.

குற்றம்சாட்டப்பட்ட 9 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை போலீசார் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க தவறி விட்டனர். 9 பேரும் வேறு வழக்குகளில் தேவையில்லை எனில் அவர்களை உடனடியாக விடுதலை செய்யலாம் எனவும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us