Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் மசோதா; கவர்னர் ரவி ஒப்புதல்!

மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் மசோதா; கவர்னர் ரவி ஒப்புதல்!

மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் மசோதா; கவர்னர் ரவி ஒப்புதல்!

மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் மசோதா; கவர்னர் ரவி ஒப்புதல்!

ADDED : ஜூன் 03, 2025 09:52 AM


Google News
Latest Tamil News
சென்னை: ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் சட்ட மசோதாவிற்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார்.

அண்மையில், சட்டசபையில் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் கவுன்சிலர் பதவி வழங்கும் சட்ட முன்வடிவை முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார். ''உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் குரல் ஒலிக்க வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் என்ற நோக்கத்தில் தமிழக அரசு செயல்படுகிறது'' என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

மசோதா கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் சட்ட மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல் அளித்து உள்ளார். இதனால், 650 மாற்றுத்திறனாளிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், 12,913 மாற்றுத்திறனாளிகள் கிராம பஞ்சாத்துக்களிலும் நியமனம் செய்யப்படுவர்.

மேலும், 388 மாற்றுத்திறனாளிகள் ஊராட்சி ஒன்றியங்களிலும், மாவட்ட ஊராட்சிகளில், 37 மாற்றுத் திறனாளிகளும் வரும் காலங்களில் நியமன அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us