Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தது ஏன்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி

மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தது ஏன்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி

மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தது ஏன்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி

மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தது ஏன்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி

ADDED : ஜூன் 03, 2025 11:02 AM


Google News
Latest Tamil News
சென்னை: ''தமிழக அரசு நீதிமன்றத்தை நாடி விடும் என்ற பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்'' என நிருபர்கள் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் துாவி மரியாதை செலுத்தினார். பின்னர் நிருபர்கள் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:

கருணாநிதி பிறந்த நாளை 22 இடங்களில் விழாவாக நடத்த போகிறோம். அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கி சொல்லக்கூடிய வகையில், அந்த பிரசாரமும் தொடர்ந்து நடைபெற இருக்கிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் பிரதிநிதித்துவம் அளிக்கும் சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் கொடுத்தது எதிர்பார்த்ததுதான். சட்டசபையில் மசோதா நிறைவேற்றி அனுப்பி இருக்கிறோம்.

ஒருவேளை நாம் நீதிமன்றத்திற்கு சென்று விடுவோம் என பயந்து அவர் ஒப்புதல் கொடுத்திருக்கலாம். வேறு ஒன்றும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us