Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கோவில் சொத்துக்களை பத்திரப்பதிவு செய்யும் அரசாணைக்கு ஐகோர்ட் தடை

கோவில் சொத்துக்களை பத்திரப்பதிவு செய்யும் அரசாணைக்கு ஐகோர்ட் தடை

கோவில் சொத்துக்களை பத்திரப்பதிவு செய்யும் அரசாணைக்கு ஐகோர்ட் தடை

கோவில் சொத்துக்களை பத்திரப்பதிவு செய்யும் அரசாணைக்கு ஐகோர்ட் தடை

ADDED : அக் 11, 2025 06:54 AM


Google News
Latest Tamil News
மதுரை: கோவில் சொத்துக்களை பத்திரப்பதிவு செய்யும் வகையில் வெளியான அரசாணைக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்தது.

சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு: கோவில்களுக்கு சொந்தமான பல சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அவை நீதிமன்ற உத்தரவுப்படி மீட்கப்பட்டு வருகின்றன. கோவில் சொத்துக்களை பத்திரப் பதிவு செய்யும் வகையில், தமிழக வருவாய்த்துறை, புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.

கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களை பதிவுத்துறையில் பூஜ்ஜியம் மதிப்பில் பதிவேற்றம் செய்ய, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை கொண்ட குழு அமைத்து அரசாணை பிறப்பிக்க, அத்துறைக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.

பட்டா நிலம், மானிய நிலம், ஊழியம் நிலம் என்ற வகைப்பாடுகளில் கோவில் நிலம் உள்ளது. புது அரசாணை மூலம் கோவில் சொத்துக்கள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் ஆஜரானார்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. தமிழக வருவாய்த்துறை, வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை, ஹிந்து சமய அறநிலையத்துறை செயலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us