பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகையில் எழுந்தருளினார்; பக்தர்கள் பரவசம்
பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகையில் எழுந்தருளினார்; பக்தர்கள் பரவசம்
பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகையில் எழுந்தருளினார்; பக்தர்கள் பரவசம்

மதுரை விழாக்கோலம்:
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி-அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம் நடந்த நிலையில், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம், இன்று நடக்கிறது.


பச்சைப்பட்டு
இதனை தொடர்ந்து காலை 6 மணியளவில், பச்சைப்பட்டு உடுத்தி, தங்கக்குதிரை வாகனத்தில், வைகையில் கள்ளழகர் எழுந்தருளினார். வெள்ளிக்குதிரை வாகனத்தில், அவரை வீரராகவ பெருமாள் வரவேற்றார். கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளிய போது ‛கோவிந்தா கோவிந்தா' என்று பக்தர்கள் பரவசத்துடன் கோஷமிட்டனர். பக்தர்களின் கோஷம் விண்ணை பிளந்தது. பாதுகாப்பு பணியில் 5,000 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
